ஜோதிகா பேசும் அடுத்த வசனம் - சர்ச்சையை கிளப்பும் நாச்சியார்
நாச்சியார் படத்தில் நடிகை ஜோதிகா பேசியுள்ள மற்றொரு வசனமும் சர்சையை கிளப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இப்படத்தின் டீஸர் வெளியாகிய போது அதில் ஜோதிகா பேசியிருந்த ஒரு கெட்ட வார்த்தை மிகவும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில், இப்படத்தின் புரோமோ வீடியோ நேற்று வெளியானது. அதில், ஒரு காட்சியில் ‘எங்களுக்கும் கோவிலும், குப்பை மேடும் ஒன்னுதான்’ எனக் கூறும் காட்சி இடம்பெற்றுள்ளது. அதேபோல், அனைத்து மதங்களின் பாடல்களும் ஒலிக்கின்றன.
எனவே, இந்த காட்சிக்கு மதவாதிகள் எதிர்ப்பு தெரிவித்து சர்ச்சையை ஏற்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
No comments: